Home » Asha Latha » Adi Aathi Vaadaiela Patta Maram song lyric in tamil

Adi Aathi Vaadaiela Patta Maram song lyric in tamil

திரனானே திரனானே தீரனனா
திர திரனானே திரனானே தீரனனா

ஆத்தி
வாடையில பட்ட மரம்
கோடையில கொழுந்து விடாதா
அடி போடி
உள்ளுக்குள்ள போட்ட விதை
முட்டி முட்டி மொளச்சு விடாதா
மயங்கி மருகிரியே மறந்து நானும் போவேனா
மலைய நாராக்கி மாலை கட்ட மாட்டேனா

ஆத்தி
வாடையில
பட்ட மரம்
கோடையில கொழுந்து விடாதா
அடி போடி
உள்ளுக்குள்ள
போட்ட விதை
முட்டி முட்டி மொளச்சு விடாதா

என்னதான் உறவிருந்தாலும் உன்னைத்தான் நெனக்கிறேன்
இருந்தும் உசுரு இல்லாம என்னமோ இருக்கிறேன்

தங்கமே உன்ன எண்ணித்தானே தவிய தவிக்கிறேன்
தரையில் துடிக்கிற மீனை தண்ணிக்குள் இழுக்கிறேன்
பொட்டு வச்ச குமரி பெண்ணே கேளடி
நீ எட்டு வச்சா இமைய மலை ஏழடி

திரனானே திரனானே தீரனனா
திர திரனானே திரனானே தீரனனா

ஏ அழற பொன்னே
கொஞ்சம் சிரிச்சிபுடு
அந்த சிரிப்புக்குள்ள
துன்பம் எரிச்சி புடு

ஆத்தி
வாடையில பட்ட மரம்
கோடையில கொழுந்து விடாதா
அடி போடி
உள்ளுக்குள்ள போட்ட விதை
முட்டி முட்டி மொளச்சு விடாதா

கனவு அறுத்து விட்டாலே மீண்டும் தொடருமா
காதல் தொலைந்து விட்டாலே கையில் சேருமா

நெருப்ப ஒளிச்சு வச்சாலும் நெசமா அணையுமா
நெஞ்ச தொலச்சுபுட்டாலும் நெனப்பு தொலையுமா
நீ வாழ்வதுன்ன வாழ்க்கை வரும் பாரம்மா
அந்த வானமேல்லாம் பொம்பளைக்கு கீழம்மா

திரனானே திரனானே தீரனனா
திர திரனானே திரனானே தீரனனா

அடி பறக்க ஒரு
ரெக்கை இருக்கு
வானம் ரொம்ப
பக்கம் இருக்கு

, , , , ,

About

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*