Home » Tamil » Ilayaraja » Amma Ne Sumantha Pillai Song Lyric

Amma Ne Sumantha Pillai Song Lyric

ஆண் : அம்மா…….
நீ சுமந்த பிள்ளை
சிறகொடிந்த கிள்ளை
என் கண்களும் என் நெஞ்சமும்
கொண்டாடும் தெய்வம் தாயே
அன்னை ஒர் ஆலயம்

ஆண் : அம்மா…….
நீ சுமந்த பிள்ளை
சிறகொடிந்த கிள்ளை

ஆண் : {மண்ணில் என்ன தோன்றக்கூடும்
மழை இல்லாத போது
மனிதனோ மிருகமோ
தாயில்லாமல் ஏது} (2)

ஆண் : அன்னை சொன்ன வார்த்தை
இன்று நினைவில் வந்தது…
அன்பு என்ற சொல்லே தாயின்
வடிவில் வந்தது….
எங்கே எங்கே

ஆண் : அம்மா…….
நீ சுமந்த பிள்ளை
சிறகொடிந்த கிள்ளை

ஆண் : {வாழவைத்த தெய்வம் இன்று
வானம் சென்றதது ஏனோ
உலகிலே உன் மகன்
நீர் இல்லாத மீனோ} (2)

ஆண் : மீண்டும் இந்த
மண்ணில் வந்து
தோன்ற வேண்டுமே….
வாழ்க வாழ்க மகனே என்று
வாழ்த்த வேண்டுமே…
எங்கே எங்கே

ஆண் : அம்மா…….
நீ சுமந்த பிள்ளை
சிறகொடிந்த கிள்ளை
என் கண்களும் என் நெஞ்சமும்
கொண்டாடும் தெய்வம் தாயே
அன்னை ஒர் ஆலயம்
அன்னை ஒர் ஆலயம்

, , , ,

About

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*