
பெண் : அன்பென்ற மழையிலே
அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே
வைக்கோலின் மேலொரு
வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே
விண்மீன்கள் கண்பாா்க்க
சூாியன் தோன்றுமோ
புகழ்மைந்தன் தோன்றினானே
கண்ணீாின் காயத்தை செந்நீாில்
ஆற்றவே சிசுபாலன் தோன்றினானே
பெண் : அன்பென்ற மழையிலே
அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே
அதிரூபன் தோன்றினானே
போா்கொண்ட பூமியில் பூக்காடு
காணவே புகழ்மைந்தன் தோன்றினானே
புகழ்மைந்தன் தோன்றினானே
பெண் : கல்வாாி மலையிலே
கல்லொன்று பூக்கவும்
கருணைமகன் தோன்றினானே
நூற்றாண்டு இரவினை நொடியோடு
போக்கிடும் ஒளியாகத் தோன்றினானே
இரும்பான நெஞ்சிலும் ஈரங்கள் கசியவே
இறைபாலன் தோன்றினானே முட்காடு
எங்கிலும் பூக்காடு பூக்கவே புவிராஜன்
தோன்றினானே
பெண் : { அன்பென்ற மழையிலே
அகிலங்கள் நனையவே அதிரூபன்
தோன்றினானே அதிரூபன்
தோன்றினானே வைக்கோலின்
மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே வந்தவன்
மின்னினானே } (2)
